குளிர்பானத்தில் மது.. பெண்ணிடம் நட்பாக பழகி சீரழித்த கொடூரன்.. விடியோவை காண்பித்து மிரட்டிய தாய், மகன்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டூர் ஆயில் மில் தெரு பகுதியை சேர்ந்தவர் தீபிகா (வயது 32). இவருக்கும் ஞானதேசிகன் என்பவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், திருமணம் முடிந்த 15 நாட்கள் மட்டுமே கணவருடன் வாழ்ந்த தீபிகா, அவரை பிரிந்து தனது தாயாரின் வீட்டிற்கு வந்துள்ளார். 

கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஆடிட்டிங் அசிஸ்டென்டாக வேலை பார்த்து வந்த தீபிகாவுக்கு, தூத்துக்குடியை சேர்ந்த சாமுவேல் (வயது 27) எனபவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், சாமுவேல் தீபிகாவை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

மேலும், இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறான். இந்த வீடியோவை காண்பித்து தீபிகாவிடம் பாலியல் ரீதியாக பலமுறை காமுகன் அத்துமீறி இருக்கிறான். 

இந்நிலையில்,கொரோனா ஊரடங்கு காரணமாக தீபிகா திருச்சியில் உள்ள காட்டூரில் இருக்கும் தனது தாயாரின் வீட்டிற்கு வந்த நிலையில், அங்கு வந்த சாமுவேல் நான் தொழில் துவங்க வேண்டும்., அதற்காக ரூபாய் 50 இலட்சம் தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளான். 

இதற்கு பணம் தர மறுத்த தீபிகாவை மிரட்டி வற்புறுத்திய நிலையில், அதிர்ச்சி அடைந்த தீபிகா இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சாமுவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவனது தாயார் ஜீவஜோதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Woman Sexual Abused and Threatening by Culprit Police Arrest 10 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->