வீட்டில் வெட்டியாக இருந்த கொடூரன்.. அரசு பணிக்கு தயாரான மனைவி, உதவி செய்த மாமியார் கொடூர கொலை.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியமிளகுப்பாறை நாயக்கர் தெரு பகுதியை சார்ந்தவர் உலகநாதன். இவரது மனைவி பவித்ரா. இவர்கள் இருவருக்கும் கனிஷ்கா என்ற  இரண்டு வயது குழந்தை உள்ளது. உலகநாதனின் மாமியார் கலைச்செல்வி, கடந்த சில நாட்களாக உலகநாதனின் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். 

உலகநாதன் பணிக்கு சென்றுவரும் இருந்த நிலையில், பவித்ரா அரசு பணிகளுக்கு தயாராகி வந்துள்ளார். வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் உலகநாதனிற்கும், அவரது மனைவிக்கும் இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று உலகநாதனின் தாயார் இந்திராணி தனது மகன் மற்றும் மருமகளுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். 

ஆனால், இருவருமே அழைப்புகளை எடுக்காததால், பக்கத்து வீட்டில் உள்ள நபர்களுக்கு தொடர்பு கொண்டு வினவியுள்ளார். அவர்கள் வீட்டை பார்த்துவிட்டு, உலுப்புறமாக தாழிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் பூட்டை உடைத்து பார்க்க சொல்கையில், உள்ளே சென்ற நபர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக பவித்ரா மற்றும் அவரின் தாயார் கலைச்செல்வி பிணமாக இரத்த வெள்ளத்தில் இருந்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குடும்ப தகராறில் இக்கொலை அரங்கேறியிருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள உலகநாதனையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy wife and his mother murder police search culprit


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->