தாயின் கண் முன்னரே துடிதுடித்து உயிரிழந்த இரட்டை சகோதரிகள்.. திருச்சியில் பெரும் சோகம்.!!
Trichy twin child girls died in pond
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி ஒன்றியம் சங்கம்பட்டியில் வசித்து வருபவர் வீரமலை. இவர் விவசாய கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனனவியின் பெயர் கண்ணம்மாள். இவர்களுக்கு நான்கு 4 மகன்கள் உள்ள நிலையில், ஐந்தாவதாக ராமுபிரியா (வயது 9) மற்றும் லட்சுமி பிரியா (வயது 9) என்ற இரண்டு இரட்டை சகோதரிகள் பிறந்துள்ளார்.
இவர்கள் அங்குள்ள வெள்ளைபிச்சம்பட்டி ஊராட்சி பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் நிலையில், சிறுமிகள் இருவரும் தாய் கண்ணம்மாளுடன் அருகில் இருக்கும் குளத்தில் துணிகள் துவக்க சென்ற நிலையில், தாய் துணி துவைத்து கொண்டு இருந்துள்ளார்.
துணி துவைத்துக்கொண்டு இருந்த தாய்க்கு திடீரென அலறல் சத்தம் கேட்ட நிலையில், சுதாரித்து பார்க்கையில் சிறுமிகள் நீரில் தத்தளித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் தாய் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்கவே, விரைந்து வந்த நபர்கள் சிறுமியை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy twin child girls died in pond