திருச்சி பள்ளி மாணவர் கொரோனா நிதியுதவி.. பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், நிவாரண நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு மக்களும் நிதிஉதவி அளிக்கலாம் என்று கோரிக்கைக்கு வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூரை சார்ந்த 8 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுவனின் பெயர் விஜேஷிராம். இவரிடம் சிறுவனின் தாத்தா, பிறந்தநாளன்று சைக்கிள் வாங்க ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை சிறுவன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கியுள்ளார். இந்த மாணவனின் பெருந்தன்மையை பாராட்டிய மாவட்ட ஆட்சியர், ரூ.10 ஆயிரம் நிதியுதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.  

திருச்சியில் உள்ள மன்னர் மெமோரியல் பள்ளியில் பயின்று வரும் முதல் வகுப்பு சிறுமி ஆராதனா, தனது சேமிப்பு ரூ.575 ஐ மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இதனைப்போன்று, இதே பள்ளியை சார்ந்த 4 ஆம் வகுப்பு மாணவி சாதனா ரூ.677 கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy student gives fund corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->