பணம்கெட்ட சொல்லி பாடாய் படுத்திய நிதி நிறுவனம்.. கொதித்தெழுந்த பெண்கள்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மருதூர் மேலத்தெரு பகுதியில் வசித்து வந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள், அங்குள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திடம் மாதாந்திர தவணைக்கு கடன் பெற்றுள்ளனர்.

தற்போதுள்ள கொரோனா ஊரடனகு காரணமாக கடன் தவணையை செலுத்த இயலாமல் திகைத்த நிலையில், நிதி நிறுவனத்தின் சார்பில் நெருக்கடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பணம் வாங்கும் போது இனிக்கிறது.. பணத்தை கேட்டால் கசக்கிறது என்று கூறி அவதூறான வார்த்தைகளில் பேசியுள்ளனர். 

இதனால் பெண்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில், தங்களின் இப்போதைய வறுமை தொடர்பாக எடுத்துரைத்து நிதி நிறுவனம் செவி சாய்க்கவில்லை. இதனையடுத்து ஆத்திரமடைந்த பெண்கள் நிதி நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஊழியர்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தனியார் நிறுவன அதிகாரிகளின் வாகனத்தை பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Self Help Group woman protest due to Loan torture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->