சரக்கு வாங்கப்போன ரவுடியை ரவுண்டு கட்டி போட்டுத்தள்ளிய கும்பல்.. திருச்சியில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள நம்பர் 1 டோல்கேட் சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மதுபானக்கடை அருகே, 32 வயது வாலிபர் தலை சிதைந்து இரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான வாலிபரின் உடல் அருகே நடத்தப்பட்ட சோதனையில், இரத்தக்கறையுடன் கட்டைகள் இருந்துள்ளது. 

இதனால், வாலிபர் தலையில் கட்டையால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணை தகவலை காவல் துறையினர் பதிவு செய்து வைத்துக்கொண்டனர். விசாரணையில், முசிறி பரிசல்துறை சாலை பகுதியை சார்ந்த பிரவீன் குமார் (வயது 32) என்பது தெரியவந்துள்ளது. 

இவர் லால்குடி பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் மனைவியிடம் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். பின்னர், மதுபானக்கடைக்கு மது வாங்க வந்து இருக்கிறார். 

அங்கு இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ப்ரவீனுடன் தகராறு செய்த நிலையில், இந்த தகராறில் பிரவீனை ஐவர் கொண்ட கும்பல் கொலை செய்து தப்பியுள்ளது தெரியவந்துள்ளது. பிரவீனின் மீது ஏற்கனவே அடிதடி, கொலை மிரட்டல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Rowdy Murder by 5 Man gang Police Investigation 27 March 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->