திருச்சி போதை மறுவாழ்வு மைய விவகாரம்.! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!
trichy rehabilitation center case
திருச்சி கே.கே.நகரில் உள்ள 'லைஃப் கேர்' என்ற போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில், காவலர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, சிகிச்சை பெற்று வந்த நபர்களின் கை, கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டு அவர்களுக்கு சிகிச்சையளித்தது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் சம்சாத் பேகம், மாவட்ட மனநல மையம் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னிலையில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் 'லைஃப் கேர்' மையத்திற்கு சீல் வைத்தனர்.
English Summary
trichy rehabilitation center case