புதுக்கோட்டை: தாத்தா, பாட்டியுடன் காரில் பயணம்.. அப்பளமாக நொறுங்கிய கார்.. இரண்டு பேர் பலி.!
Trichy Pudukkottai Car Lorry Collison Accident Grand fa and Grand Ma Died
திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் ஜான்சி நகர் பகுதியை சார்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவரது மனைவி சத்யவாணி முத்து (வயது 58). இவர்களின் பேரன் சூரியப்ரகாஷ் (வயது 5). இவர்கள் மூவரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் இருக்கும் உறவினரின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூவரும், நேற்று மீண்டும் காரில் திருச்சிக்கு திரும்பியுள்ளனர். இவர்களின் கார் புதுக்கோட்டை அருகேயுள்ள நெடுஞ்சேரி பகுதியில் வருகையில், கல் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில், காரின் முன்புறம் அப்பளம் போல நொருங்கவே, விபத்தில் படுகாயமடைந்த செல்வராஜ் மற்றும் அவரது மனைவி சாத்தியவாணி முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். சிறுவன் சூரிய பிரகாஷ் மட்டும் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளான்.
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த வெள்ளனூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த தம்பதிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், லாரி ஓட்டுநர் குணசேகரனை தேடி வருகின்றனர். மேலும், செல்வராஜ் - சத்யவாணி முத்து தம்பதியின் மகன் மற்றும் மருமகள் திருச்சியில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Trichy Pudukkottai Car Lorry Collison Accident Grand fa and Grand Ma Died