பெண்களிடம் நள்ளிரவு விசாரணை.. ஸ்டேஷனில் ஆபாச வர்ணனை.. வீட்டிற்கு அனுப்பிய காவல்துறை.!!
Trichy Police officer dismiss due to abuse power and torture girls
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மணிவண்ணா. இவர் கட்டப்பஞ்சாயத்து செய்வது, குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பது, புகார் அளிக்கும் பெண்களிடம் நள்ளிரவில் தொடர்பு கொண்டு விசாரணை செய்வது என குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது.
இதுமட்டுமல்லாது ஊரடங்கு நேரங்களில் பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தை புரோக்கர் மூலமாக பணம் பெற்றுக்கொண்டு மீண்டும் வழங்கி வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், காவல் நிலையத்தில் உள்ள பெண்களையும் ஒருமையில் அவதூறாக பேசுவதாகவும் இருந்து வந்துள்ளார்.
மணிவண்ணன் பெரம்பலூர் மாவட்டத்தில் காவல் துறை ஆய்வாளராக பணியாற்றுகையில், புகார் அளித்த பெண்ணிடம் நள்ளிரவு 12 மணிக்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். மேலும், அடிக்கடி இது போன்று தொந்தரவு செய்ததை அடுத்து, பெண் திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் டி.ஐ.ஜி விசாரணை மேற்கொண்டதை அடுத்து, மணிவண்ணனின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இதன்பின்னர், கடந்த மாத இறுதியில் கட்டாய பணி ஓய்வு வழங்க முடிவு செய்து மணிவண்ணனுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், டி.ஐ.ஜி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனால் தனக்கு பணி ஓய்வு குறித்து உத்தரவு வராது என்ற நம்பிக்கையில் காவல் நிலையத்திற்கு செல்லவே, காவல் நிலையம் சென்றதும் கட்டாய பணி ஓய்விற்கான கடிதத்தை வாங்கிக்கொண்டு இல்லத்திற்கு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy Police officer dismiss due to abuse power and torture girls