உதவிகேட்டு தவித்த வயதான தம்பதி.. உதவிக்கரம் நீட்டிய திருச்சி காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய சவுராஷ்டிரா பகுதியை சார்ந்த வயதான தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியில் கணவருக்கு டயாலிசிஸ் பிரச்சனை இருந்த நிலையில், இவர் மருத்துவமனைக்கு செல்ல இயலாமல் தவித்து வந்துள்ளார். 

மேலும், வயதான மனைவியும் ஆட்டோவை அழைக்க இயலாது தவித்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். இதனையடுத்து இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி சரக கமிஷனர் உத்தரவின் பேரில்,  காவல் அதிகாரிகள் தயாளன், ரவி ஆகியோர் நேரில் விரைந்து தேவையான உதவிகளை செய்து, மருத்துவமனைக்கு சென்று வர ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்த தகவலை திருச்சி மாவட்ட காவல் துறை, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy police help aged couple


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->