திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் விபத்து... 2 தொழிலாளர்கள் படுகாயம்.!
Trichy Ordnance Factory Accident 2 Workers Got Injured
துப்பாக்கி தொழிற்சாலையில், துப்பாக்கி வெடித்து சிதறி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் தங்களின் பணிகளை செய்துகொண்டு இருந்தனர். இந்த பணியின் போது இன்று விபத்து ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி பரிசோதனையில் பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது, திடீரென துப்பாக்கி வெடித்து சிதறியுள்ளது. இதனையடுத்து, பணியில் இருந்த சக ஊழியர்கள், படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Trichy Ordnance Factory Accident 2 Workers Got Injured