மகளுடன் சண்டை... வயதான தம்பதி எடுத்த விபரீத முடிவு.. காத்திருந்த அதிஷ்டம்.!
Trichy Old Couple Suicide Attempt Police Investigation
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில், பக்தர்கள் நீராட தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. காவேரி ஆற்றில் தற்போது அதிகளவு தண்ணீர் செல்லும் சூழலில், நேற்று முன்தினம் அங்கு வந்த வயதான தம்பதி, காவேரிதாயினை வணங்கினர். பின்னர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க நகைகள், வளையல் போன்ற நகைகளை உண்டியலில் போட்டனர்.
இதனைக்கண்ட சிலர் அவர்களின் வேண்டுதலாக இருக்கலாம் என்று எண்ணிய நிலையில், படித்துறையில் இறங்கிய தம்பதிகள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்ல இயலாமல் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தனர். பின்னர் நீண்ட நேரமாக இதே நிலை நீடித்ததால், சந்தேகமடைந்த அங்கிருந்த கோவில் ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துவிட்டு, அவர்கள் இருவரையும் கைத்தாங்கலாக கரைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலைக்காக இருவரும் காவேரி ஆற்றில் இறங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியை சார்ந்த வெங்கடேசன் (வயது 81) மற்றும் அவரது மனைவி இந்திராணி (வயது 72) என்பதும் தெரியவந்துள்ளது.
தற்கொலைக்கு அவர்கள் தெரிவித்த காரணமாவது, " எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். எங்களுக்கு ஆண் வாரிசு இல்லாத நிலையில், பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தோம். இருவரையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்த நிலையில், எங்களுக்கு வயதாகிவிட்டதால் கோயம்புத்தூரில் இருக்கும் இரண்டாவது மகளின் வீட்டில் இருந்தோம். அங்கு மகளுடன் மனக்கசப்பு ஏற்படவே, பின்னாளில் பெரிய பாதிப்பாக மனதில் ஏற்பட்டது.
இதனால் திருச்சிக்கு வந்து ஸ்ரீரெங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று திருச்சிக்கு வந்து சாமிகும்பிட்டு விட்டு காவேரி ஆற்றில் உயிரை விட ஆற்றில் இறங்கினோம். எங்களை கவனித்து வந்தவர்கள் எங்களை மீட்டுவிட்டார்கள் " என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் தம்பதிகளை ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் சேர்த்துவிட்டு, கோயம்புத்தூரில் இருக்கும் மகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy Old Couple Suicide Attempt Police Investigation