திருச்சி: திருமணம் முடிந்து 20 நாட்கள்.. விபத்தில் தலைக்கவசம் பிளந்து காவல் அதிகாரி துடிதுடித்து பலி..! - Seithipunal
Seithipunal


திருமணமான 20 நாட்களில் சாலை விபத்தில் காவல்துறை அதிகாரி பலியாகியுள்ள சோகம் அரங்கேறியுள்ளது. 

திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் மணிகண்டம் காவல்நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று பணியை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். 

லால்குடி சாலையில் உள்ள தாளக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே எதிரே வந்த மினி வேன் - இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட காவல் அதிகாரி ரஞ்சித்குமார், இரும்பு கம்பி ஒன்றில் மோதி தலைக்கவசம் இரண்டாகப் பிளந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்காக போராடி துடித்துள்ளார். 

இவரை உடனடியாக மீட்ட அப்பகுதி மக்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அதிகாரி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், திருமணம் முடிந்த 20 நாட்களில் காவல் அதிகாரி ரஞ்சித் குமார் மரணமடைந்துள்ள துயரம், சக காவல் அதிகாரிகளையும், அவரின் குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy New Married Police Officer Ranjith Kumar Died an Accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->