செத்துப்போன ஆடால் வந்த தகராறு.. அரங்கேறிய கொடூர கொலை..! - Seithipunal
Seithipunal


இறந்து போன ஆட்டை எதற்காக விலைக்கு வாங்கி வந்தாய்? என்று தம்பியை கேட்ட அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி அமராவதி சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது சகோதரர்கள் ராஜசேகரன் மற்றும் ரவிக்குமார். இவர்கள் மூன்று பேரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். 

கடந்த திங்கட்கிழமை அதே ஊரில் சந்திரா என்பவரின் ஆடு ஒன்று இறந்துபோயுள்ளது. அந்த ஆட்டை சமைத்து சாப்பிட சிவகுமார் விலை கொடுத்து வாங்கி வந்த நிலையில், இறந்து போன ஆட்டை சாப்பிடக்கூடாது, அதனை எதற்காக விலைக்கு வாங்கி வந்தாய்? என்று தனது அண்ணனை தம்பி ரவிக்குமார் கண்டித்துள்ளார். 

இதன்போது இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கப்பலாக மாறிய நிலையில், சிவக்குமாரும் மூத்த அண்ணன் ராஜேந்திரனும் சேர்ந்து ரவிக்குமாரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் உச்சமாக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரவிக்குமாரை சிவகுமார் குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சகோதரர்களான சிவகுமார் மற்றும் ராஜேந்திரன் கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Musiri Ravikumar Murder by Brother Problem Starts Cooking Mutton 5 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->