மனதை கல்லாக்கி 2 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. திருச்சியில் கண்ணீர் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மனப்பாறையை அடுத்துள்ள சமுத்திரம் காந்திநகர் பகுதியை சார்ந்தவர் கனகராஜ். இவரது மனைவியின் பெயர் சந்திமீனா (வயது 40). இவர்கள் இருவருக்கும் லோகநாதன் என்ற 14 வயது மகனும், கோகிலா என்ற 13 வயது மகளும், லலிதா என்ற 11 வயது மகளும் இருக்கின்றனர். கனகராஜ் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், சாந்திமீனா கணவரின் குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளார். 

குழந்தைகள் மூவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதியன்று வீட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் மாயமானதாகவும், இது குறித்து கனகராஜின் சகோதரர் வீட்டில் இருந்த நபர்களை சத்தம் போட்டுள்ளார். மேலும், சாந்திமீனா அனைவரும் தன்னை சந்தேகிப்பதாக நினைத்து மனவேதனை அடைந்துள்ளார். இதனையடுத்து குளிர்பானத்தில் எலிமருந்தை கலந்து தனது மகள்களுக்கு கொடுத்துள்ளார். 

குளிர்பானத்தை அருந்திய குழந்தைகள் உயிருக்கு போராடவே, அங்குள்ள திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாது, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், மகள்களை தானே கொலை செய்துவிட்டோமே என்ற மனவருத்தத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy mother killed her daughter


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->