மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, மது போதையில் 5 நாட்களாக கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்கள்..! - Seithipunal
Seithipunal


திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில், கடந்த 15 நாட்களாக 28 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி சுற்றி திரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் அங்குள்ள தனியார் விடுதி வாயிலில் அதிகாலை நேரத்தில் ஆடைகள் கலைக்கப்பட்டு, அரைநிர்வாண கோலத்தில் மயக்கமாக இருந்துள்ளார். அவரது பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் வெளியேறியதற்கான அடையாளமும் இருந்துள்ளது. 

விடுதியில் தங்கியிருந்து பணியாற்றி வரும் சமையல் மாஸ்டர் கார்த்திக் என்பவர், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், அருகில் இருந்த ஆட்டோவில் 4 பேர் மது போதையில் இருந்துள்ளனர். அவர்களை காண விரைந்து சென்ற நிலையில், சுதாரித்த குடிமகன்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் ஆடைகளை வாங்கி பெண்மணிக்கு உடுத்திவிட்டு, அங்குள்ள மருத்துவமனைக்கு பெண்மணியை அழைத்து சென்றுள்ளனர்.

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும், திருச்சி அருகேயுள்ள மாத்தூர் பகுதியை சார்ந்த பெண்மணி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 5 நாட்களாக இரவு வேளையில் பெண்மணியை ஆட்டோவில் அழைத்து செல்லும் காமுகன்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அங்குள்ள கண்காணிப்பு காமிராக்கள் காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Mentally Challenged girl sexual abuse by gang Last 5 Days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->