கணவர் வீட்டார் கொடுமை.. 2 மகன்களுடன் தாய் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கணவர் மற்றும் கணவரின் சகோதரி செய்த கொடுமையால் பெண் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வரதன்கோன்பட்டி பகுதியை சார்ந்தவர் முருகேசன் (வயது 37). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவரது மனைவி நித்யா (வயது 27). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 8 வருடங்கள் ஆகிறது. இருவருக்கும் நல்லகண்ணு என்ற 6 வயது மகனும், ரோஹித் என்ற 4 வயது மகனும் என இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில், கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தம்பதிகள் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளனர். இவர்களின் சண்டை தொடர்ந்துகொண்டே வந்ததால், நித்யா மணப்பாறை அருகேயுள்ள பொன்னம்பலத்தான்பட்டியில் இருக்கும் தாயின் வீட்டிற்கு சென்று, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 

மேலும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நித்யா தனியார் பஞ்சு ஆலையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 30 ஆம் தேதி மனைவியின் வீட்டிற்கு சென்ற கணவரின் காரணமாக மீண்டும் தம்பதிகளுக்குள் பிரச்சனை நடந்துள்ளது. 

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நித்யா, கடந்த 1 ஆம் தேதி கடிதம் எழுதிவைத்துவிட்டு எலிமருந்தை தேநீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நித்யா மற்றும் பேரக்குழந்தைகளை மீட்ட நித்யாவின் குடும்பத்தினர், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நித்யா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, இன்று அதிகாலை ரோஹித்தும், நல்லக்கண்ணும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். மேலும், நித்யா தனது மரணகடிதத்தில், தனது கணவர் மற்றும் கணவரின் அக்கா செய்த கொடுமையால் தற்கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மணப்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Manapparai Mother Nithya Suicide with 2 Sons due to His Husband Murugesan and Family Torture 4 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->