குழந்தைகள் கண்முன்னே மனைவியை அடித்து கொலை செய்த பயங்கரம்.. திருச்சியில் நெஞ்சை உள்ளுக்கும் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் செங்குலத்தான் காலனி பகுதியை சார்ந்தவர் தவசி (வயது 27). இப்பகுதியில் உள்ள உணவகத்தில், தவசி பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 24). இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்த நிலையில், கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இந்த தம்பதிக்கு ஐந்து வயதுடைய சாய்பிரசாத் என்ற மகனும், 2 வயதுடைய கவிநிலா என்ற மகளும் உள்ளனர். ராஜேஸ்வரி குடும்ப சூழ்நிலையின் காரணமாக, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச என்று வீட்டு வேலை செய்து வந்துள்ளார். தவசி மது அருந்தும் பழக்கத்தை வைத்திருந்த நிலையில், பலரிடம் கடன் வாங்கியுள்ளார். 

இதனால் கணவன் - மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், தவசி தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தம்பதிகளுக்குள் தகராறு ஏற்படும் போதெல்லாம், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா சமாதானம் செய்துள்ளார். 

இந்நிலையில், நேற்று தம்பதிகளுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ராஜேஸ்வரியிடம் மன்னார்குடிக்கு சென்றுவிடலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்திற்கு ராஜேஸ்வரி மறுப்பு தெரிவிக்கவே, தகராறு அதிகரித்துள்ளது. இதனைக்கண்ட குடும்பத்தினர் தம்பதிகளை அமைதிப்படுத்தி, இரவு தூங்க சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை நேரத்தில் சகுந்தலா துணிதுவைக்க எழுந்திருந்த நிலையில், ராஜேஸ்வரியின் இல்லத்தில் ரேடியோ சத்தம் கேட்டுள்ளது. உள்ளே சென்று பார்க்கையில், ராஜேஸ்வரி இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். உடலின் அருகே இரண்டு குழந்தைகளும் கதறியழுதுள்ளது. 

இதனையடுத்து தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் சென்று குழந்தைகளிடம் விசாரணை செய்கையில், குழந்தைகளின் கண் முன்னரே தாயை அடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள தவசியை தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Man Murder Wife due to Doubts in front of his Children 22 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->