நல்ல அக்கா.. மாமா.. தம்பி.. த்தூ... குடும்பத்தையே காரி துப்பிய மக்கள்.. தம்பி அக்காவை வச்சி செய்யுற வேலையா இது?..!
Trichy man Cheated Thiruvarur girl photo abused by Neighbor
திருச்சியை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர், எந்த சமயத்திலும் மொபைலில் பேஸ்புக் மூலமாக பெண்களின் புகைப்படத்தை பார்த்து நட்பு அழைப்பு விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவ்வாறாக திருவாரூர் பகுதியை சார்ந்த அனுசியா என்ற பெண்மணியை நட்பு வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளார்.
பின்னர், பெண்மணியிடம் பேசி அலைபேசி எண்ணை வாங்கி கடலைபோட்டு வந்த நிலையில், தனக்கு திருமணமானதை மறைத்து பெண்ணிடம் நவரசத்தை பொழிந்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்மணி அவ்வப்போது கேட்ட பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பிவிட்டு, மொத்தமாக 3 லட்சத்தை இழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தனது காதலியை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுக்க, திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்திற்கு சென்ற நபருக்கு பெரும் அதிர்ச்சியாக, திரைப்பட பாணியை போல " தன்னிடம் இவ்வளவு நாளாக பேசியது முகநூல் புகைப்படத்தில் இருக்கும் இளம் பெண் அல்ல, அது ஒரு பழைய டெலிபோன் பூத் ஆண்டி " என்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் நாவிகமலத்தையும் அடக்கிவிட்டு, முகநூலில் உள்ள பெண் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பெரும் அதிர்ச்சியாக அது பக்கத்து வீட்டு இளம்பெண் என்பதும், அவரது புகைப்படத்தை தவறாக குடும்பத்துடன் சேர்ந்து உபயோகம் செய்து வந்ததும் உறுதியாகியுள்ளது.
இதன் பின்னர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சொந்த தம்பியே தனது அக்காவை அலைபேசியில் பேச வைத்து ரூபாய் 3 லட்சம் வசூல் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், இந்த மோசடிக்கு 40 வயது பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்தள்ளார். விசாரணைக்கு பின்னர் பெண்ணின் புகைப்படத்தை அவதூறாக பயன்படுத்திய அனுசியா, அவரது கணவர் ஐயப்பன், அனுசுயாவின் சகோதரர் கவிதன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy man Cheated Thiruvarur girl photo abused by Neighbor