காதலி தொல்லை.. உருவான பிள்ளை..! கம்பி நீட்டிய காதலனுக்கு, காத்திருந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திருச்சியை அடுத்த துறையூர் பச்சைமலை பகுதியில் வசித்துவரும் பிரதாப் என்பவர் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சூர்யா எனும் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணும் பிரதாப்பை காதலித்து இருக்கின்றார். இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தத்தில் எல்லை மீறிய உறவால் சூர்யா கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில், ஆறு மாதம் வரை கர்ப்பமாக இருப்பதை சூர்யா தன்னுடைய வீட்டில் இருக்கும் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

Image result for pregnant seithipunal

சூர்யாவின் வயிறு பெரியதாக இருப்பதைப் பார்த்த சூர்யாவின் பெற்றோர் மிரட்டி கேட்டதில் தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பிரதாப்பிடம் சென்று தன் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு இருக்கின்றனர். ஆனால், பிரதாப் சூர்யாவைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து இருக்கின்றார்.

இதன் காரணமாக சூர்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் சென்று தன் மகளை ஏமாற்றிவிட்டதாக பிரதாப் மீது புகார் அளித்துள்ளனர். அதன் பின்னர் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் இருவரும் மேஜர் என்பதால் அறிவுரை வழங்கியுள்ளார்.

இருந்தும் பிரதாப் மறுத்துள்ளார். அடுத்ததாக காவல்துறை தனியாக அழைத்துச் சென்று பேசி பிரதாப்பை சம்மதிக்க வைத்துள்ளனர். பின்னர் அவர்களின் வீட்டிற்கு அருகே இருக்கும் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy lovers married in police station


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->