#தமிழகம் || காதல் திருமணம் செய்த இளைஞர் குத்தி கொலை.!
trichy love husband mystery murder case
திருச்சி அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர் தலையில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அடுத்த பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19). பெயிண்டிங் வேலை செய்து வந்த ஆகாஷ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தாயனூரை சேர்ந்த அகிலா (வயது 21) என்பவரை இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இரு வீட்டாரும் இவர்களை சேர்த்துக் கொண்ட நிலையில், ஆகாஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு முற்றவே, கணவருடன் கோபித்துக் கொண்டு அகிலா தாயனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று ஆகாஷ் தனது வீட்டில் இரவு சுமார் 9 மணியளவில் மனைவியை பார்க்க செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலை புங்கனூர் பெரிய ஏரி வயல் பகுதியில் கை, முகம், கால்களில் கத்தி குத்து காயங்களுடன் ஆகாஷ் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதையடுத்து சோமரசம்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆகாஷ் யாரால், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர்.
English Summary
trichy love husband mystery murder case