திருவாரூரில், திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்தவன் சிக்கினான்! திருடியவன் யார் தெரியுமா?!
trichy lalitha jewelers robbers arrested in thiruvarur
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த வழக்கில் திருடியவன் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று அதிகாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி என்ற நகை கடை நிறுவனத்தில் பின்புறமாக துளையிட்டு சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை இருவர் கொள்ளையடித்தனர்.
கொள்ளை அடித்தது யார் என தெரியாமல் விழிபிதுங்கி நின்ற போலீசார், அதிரடியாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரணையை வேகமாக முடக்கினர். இன்று காலை வரை புதுக்கோட்டையில் தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார், விசாரணையை அடுத்தகட்ட நிலைக்கு நகர்த்தி இருந்தனர்.
தற்போது வாகன தணிக்கையின் பொழுது திருவாரூரில் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒருவன் தப்பிக்க முயன்றபோது சிக்கியுள்ளான். அவனை பரிசோதித்த போது அவனிடம் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சியில் இருவர்கள் கொள்ளை அடித்த நிலையில், தற்போது அதில் ஒருவன் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. திருவாரூரில் பிடிபட்டவனை கைது செய்ய திருச்சியிலிருந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று கொண்டுள்ளனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் லலிதா ஜுவல்லரியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தான் என்பது ஒப்பிட்டுப் பார்த்தபோது தெரியவந்தது.
கொள்ளையடித்தவர்கள் வட மாநிலத்தவர்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் சிக்கியவர் திருச்சியை சார்ந்தவர் என தகவல் தெரியவந்துள்ளது ஆனாலும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருக்கிறது.
English Summary
trichy lalitha jewelers robbers arrested in thiruvarur