அதிகரித்து வந்த மனஉளைச்சல்.. விபரீத முடிவெடுத்த காவல் அதிகாரி.. திருச்சியில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


மணப்பாறையை சார்ந்த பெண் காவல் அதிகாரி, மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை சார்ந்த பெண் காவல் அதிகாரி பவானி. இவர் அங்குள்ள வையம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இவரது கணவருடன் கொண்ட கருத்து வேறுபட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சக பெண் காவல் அதிகாரியிடம் ரூ.4 இலட்சம் கடன் கொடுத்ததும், அது திரும்ப வரவில்லை என்று தெரியவருகிறது. இதனால் பெண்மணி கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

இந்த சூழ்நிலையில், வழக்கு தொடர்பாக இரு சக்கர வாகனத்தில் கோயம்புத்தூருக்கு சென்றுள்ளார். பின்னர் மனஅழுத்தம் அதிகமாகி, எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மேலும், இவருக்கு இறுதியாக கொடுக்கப்பட்ட பணியையும் எந்த விதமான அலட்சியமும் இல்லாது, பணியை செய்துமுடித்துவிட்டு உயிரை மாய்துகொண்டது சக காவல் அதிகாரிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Lady cop suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->