சிறுமிக்கு பாலியல் தொல்லை... விசாரணைக்கு பயந்து தற்கொலை..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள போசம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் நன்னி போஸன் (வயது 45). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு மனைவியும் திருமணமான மகளும், ஒரு மகனும் உள்ளனர். 

இந்நிலையில், நன்னி போசன் இதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளான். இதுதொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜீயபுரம் மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நன்னி போசணை தேடி வந்துள்ளனர். 

தலைமறைவான நன்னி போசன் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு சென்று பதுங்கி இருப்பதாக தகவல் தெரிய வந்த நிலையில், தன்னை எப்படியும் காவல்துறையினர் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் வயல்வெளியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Jeeyapuram man sexual torture girl suicide attempt fear of investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->