திருச்சி || ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டையின் வாசலில் பலூன் வியாபாரி ஒருவர் ஹீலியம் சிலிண்டர் வைத்து பலூன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த சிலிண்டர் வெடித்ததனால் ரவிகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில்,13 வயதான ஜீவானந்தம் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில், உயிரிழந்த ரவிக்குமார் என்பவர் ஹீலியம் சிலிண்டர் அருகே நின்று புகைபிடித்துக் கொண்டிருந்ததால், அந்த சிகெரெட்டின் தீப்பொறியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஹீலியம் சிலிண்டர் வெடித்த தாக்கத்தில் 21 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் வெடித்து அருகில் இருந்த ஆட்டோ மீது விழுந்ததனால் ஆட்டோ  நொறுங்கியது. 

இதுமட்டுமின்றி, சுற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் உடைந்து சிதறியது. அருகில் இருந்த நகைக்கடையின் கண்ணாடியும் உடைந்தது. இந்நிலையில், தப்பிச் சென்ற பலூன் வியாபாரியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy helium cylinder explode man death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->