சொந்த மனைவியை நண்பன் சீரழிக்க.. சந்தோஷத்தில் திளைத்த கணவன்.! திருச்சியில் கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய உதவிய கொடூர கணவன் மற்றும் அவரது நண்பனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்தவர் முகமது அஸாம். 

இவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார். முகமது அஸாமின் நண்பர் முகமது பாருக். முகமது பாருக் அவ்வப்போது நண்பரான முகமது அஸாமின் இல்லத்திற்கு வந்து சென்ற நிலையில், அவரது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் பிடித்துள்ளார். 

பின்னர் இதனை காண்பித்து பெண்மணியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த விஷயத்திற்கு கணவனும் உடந்தையாக இருந்த நிலையில், இருவரும் சேர்ந்து பெண்மணியின் வாழ்க்கையை சீரழித்து வந்துள்ளனர். 

இந்த சூழ்நிலையில், பெண்மணியின் மகள் மீது முகமது பாரூக்கின் கவனம் திரும்பவே, மகளின் வாழ்க்கையை காப்பாற்றும் பொருட்டு அங்குள்ள காவல் நிலையத்தில் தனது கணவர் மற்றும் அவனது நண்பர் குறித்து புகார் அளித்துள்ளார். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy girl sexual abuse police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->