காதல் போர்வையில் சிறுமியை சீரழித்த கொடூரன்... எடுக்கத்தெரிந்த விபரீத முடிவு.. கடவுளாய் வந்த உறவினர்கள்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலைய பகுதியை சார்ந்தவர் விஜய் சுப்பிரமணி (வயது 23). இவர் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதே பகுதியில், பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவியும் இருந்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் நீண்ட மாதமாக காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இவர்களுடைய காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால், மாணவியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே, மாணவியிடம் சுப்பிரமணி ஆசை வார்த்தை கூறி ஏற்கனவே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவருகிறது. இதனால் மனைவி கர்ப்பமாகவே, இந்த விவகாரம் குறித்து வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனைக்கண்ட உறவினர்கள் மாணவியை அங்குள்ள ஏர்போர்ட் காவல் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளனர். மாணவியிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து பொன்மலை மகளிர் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறிய காமுகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy girl sexual abuse by love boy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->