கிணற்றில் கிடந்த பெண்ணின் பிணம்.! கொலையா.? தற்கொலையா.? பின்னணியில் மர்மம்.!
trichy girl murder
திருச்சி மணப்பாறை பாரதியார் நகரைச் சேர்ந்த நாகஜோதி என்ற பெண் திங்கட்கிழமை தனது குழந்தைகளைப் பள்ளிக்கு எக்செல் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், மணப்பாறை காவல் நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என அவரது கணவர் தங்கப்பாண்டி புகாரளித்துள்ளார்.
பின்னர் மறுநாள் உடையாபட்டி அருகே இருந்த விவசாயக் கிணறு ஒன்றில் நாகஜோதி பிணமாக மிதந்தது தெரியவந்துள்ளது. அங்கிருந்து சிறிது துாரத்தில் அவரது இருசக்கர வாகனமும், செருப்பும் கிடந்துள்ளது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்புதுறையினருடன் சென்று கயிறு கட்டி பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். பின்னர் முதற்கட்ட விசாரணையில் போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னையில் உள்ள பிரபல ஜூவல்லரி நிறுவனம் ஒன்றில் அவர் பொற்கொல்லராகப் பணிபுரிந்துள்ளார் நாகஜோதியின் கணவர் தங்கப்பாண்டி. இவருக்கு மும்பைக்கு பணியிடமாற்றம் ஏற்பட்ட நிலையில் அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றுள்ளார்.
அப்பொழுது அவரது மனைவி மும்பைக்கு குடும்பத்துடன் அழைத்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். கடன் வாங்கி இருப்பதாகவும், அதனை அடைத்தவுடன் ஊருக்கே திரும்பி வந்து விடுவதாகவும் தங்கபாண்டி கெஞ்சியுள்ளார். இது கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கும் நாகஜோதி மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளூரிலேயே வேறொரு பெண்ணுடன் தங்கப்பாண்டிக்கு தொடர்பிருப்பதாகவும் அதனால் அவன் தான் என் மகளை கொலை செய்து விட்டான் என்றும், நாகஜோதியின் தாய் குற்றம் சாட்டி இருக்கின்றார்.
நாகஜோதி மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யகோரி மணப்பாறை அரசு மருத்துவமனையின் முன் நாகஜோதியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.