இந்நாள் கணவனை விட்டுவிட்டு, முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்.. கண்ணீரில் கணவர்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியை சார்ந்தவர் மகாலிங்கம் (வயது 44). இவர் கோயம்புத்தூரில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இதே பகுதியை சார்ந்த ரம்யா (வயது 28) என்ற பெண்மணிக்கும், கடந்த 8 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், மகாலிங்கம் பணிசூழல் காரணமாக கோயம்புத்தூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார். ரம்யா தனது குழந்தைகளுடன் திருச்சியில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், குழந்தைகளுடன் ரம்யா மாயமாகிவிட்டதாக உறவினர்கள் மகாலிங்கத்திற்கு தகவல் தெரிவிக்கவே, மகாலிங்கம் திருச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும் பலனில்லை.

இதனைத்தொடர்ந்து உறையூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கவே, காவல் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் ரம்யாவிற்கு திருமணம் முடிவதற்கு முன்னதாக காதல் இருந்து வந்தது தெரியவந்தது. ரம்யா வேறொரு நபரை காதலித்து வந்த நிலையில், அவர் முன்னாள் காதலனுடன் குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றது அம்பலமாகியுள்ளது. 

இவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தொடர்பான தேடலில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRICHY GIRL ESCAPE WITH EX LOVE HUSBAND FEELING SAD


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->