திருச்சி: என் போனில் பத்மா என்ற பெயர் இருக்கும்.. அவன்தான் தற்கொலைக்கு காரணம்.. பெண் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி வேம்பனூர் சிலோன் காலனி பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 17). இவர் புதுக்கோட்டையில் இருக்கும் கல்லூரியில் கம்பியூட்டர் சயின்ஸ் முதல் வருடம் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் நேற்றுமுன்தினத்தின் போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த வளநாடு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர், தீயணைப்பு படையினரின் உதவியுடன் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை நிறைவு பெற்றதும் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த நிலையில், தற்கொலைக்கு முன்னதாக பெண்மணி எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை ஆய்வு செய்கையில், " எனது அலைபேசியில் பத்மா என்ற பெயரில் உள்ள நபர் தான் என் மரணத்திற்கு காரணம். எனது மரணம் போன்ற நிலை, இனி எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது " என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் அலைபேசியை கைப்பற்றிய காவல் துறையினர், ஆய்வு செய்கையில் அவர் வாலிபரை காதலித்து வந்ததும், அவரின் மற்றொரு முகத்தை உணர்ந்த பெண்மணி கேள்வி எழுப்புகையில், உன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்வன் என்று மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது. வாலிபர் யார்? என்று தற்போது காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy girl Bhakyalatsumi Suicide due to Love Boy Torture Release Private Image Threating Social Media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->