திருச்சியில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம்.. குடும்பம் தொடர்பாக கண்ணீர் தகவல்.!!
Trichy family suicide police investigation
தமிழகத்தில் உள்ள திருச்சி திருவெரும்பூதூர் நாவல்பட்டு பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவரது மனைவி விஜயகவுரி (வயது 59). இவர் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை ஆவார். இவரது கணவரான முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், இவருக்கு விஜயலட்சுமி (வயது 32), விஜயவாணி (வயது 29) என்ற மகளும், விஜயகுமார் (வயது 25) என்ற மகனும் இருந்துள்ளனர்.
விஜயகுமார் டிப்ளோமா படித்துள்ள நிலையில், கடந்த 10 மாதத்திற்கு முன்னதாக விபத்தில் சிக்கி வீட்டிலேயே சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக விஜயகுமாரின் உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளார். அக்கம் பக்கத்தினரிடமும் அதிகளவு பேச்சு இல்லாதால், அக்கம் பக்கத்தினரிடமும் மகன் இறப்பு குறித்து கூறாது, தாங்களாகவே தற்கொலை முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அனைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், சோக தக்வாலாந்து வெளிவந்துள்ளது.
விஜயகவுரிக்கு சொந்த ஊராக தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் ராஜகிரி இருந்துள்ளது. சுமார் 70 வருடத்திற்கு முன்னதாக விஜயகவுரியின் தந்தை திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், பூலாங்குடி பகுதியில் மனைவி, மகளுடன் வாழ்க்கையை துவங்கி வந்துள்ளார். விஜயகவுரியின் தம்பியான ஜெய்சங்கர், அவரது குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வந்துள்ளார்.
விஜயகவுரிக்கும், அவரது சகோதரரின் குடும்பத்திற்கும் கடந்த 12 வருடமாக பேச்சுவார்த்தை ஏதும் இல்லாத நிலையில், உறவினர்களின் வீட்டிற்கும் சென்றது கிடையாது என்று கூறப்படுகிறது. மேலும், சொந்த ஊரில் இருக்கும் உறவுகளை மறந்து வருடங்கள் ஓடிய நிலையில், பணி ஓய்வு பெற்ற பின்னர் தனது மகன் மற்றும் மகள்களுடன் வசித்து வந்துள்ளார். உறவுகளின் ஆதரவும் இல்லாததால் மகள்களுக்கு திருமணம் செய்ய வழியில்லாமல் தவித்துள்ளார்.
இதற்கான போதிய பணமும் இல்லாத சூழலில், மகன் கடந்த 10 மாதத்திற்கு முன்னதாக விபத்தில் சிக்கி கோமாவிற்கு செல்லவே, குடும்பமே மனவருத்தத்தில் இருந்து இருந்துள்ளனர். இந்த சூழ்நிலைக்கு பின்னரே மகனின் உயிரிழப்பு அரங்கேறியுள்ளது. இதன்பின்னர் இருவரும் தற்கொலை செய்துள்ளனர். ஈரோட்டில் இருக்கும் விஜயகவுரியின் குடும்பம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, இது குறித்த தகவலை தெரியப்படுத்தினர். இதன்பின்னர் நால்வரின் உடலும் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று தகனம் செய்யப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy family suicide police investigation