ஆள் மாறாட்டம் செய்த அதிமுக பிரமுகர்.! 6 ஆண்டு சிறை தண்டனை..!
trichy district admk Deputy Secretary arrest
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளரான இவருக்கும், மணப்பாறையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையும், மாற்றுத் திறனாளியுமான நிர்மலாதேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், இவர் ஒரே பெயருடைய மற்றொரு பெண்ணான நிர்மலா தேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக முதல் மனைவியான நிர்மலா தேவி தன் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் முதல் மனைவியின் பெயரில் இருந்த பல லட்சம் மதிப்புடைய இடத்தை, தனது இரண்டாவது மனைவியின் பெயரும் நிர்மலாதேவி என்பதால் ஆள்மாறாட்டம் செய்து தன்னுடைய பெயருக்கு கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை மாற்றி எழுதியுள்ளார். இது குறித்து தகவலறிந்த முதல் மனைவி நிர்மலா தேவி மணப்பாறை போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக மணப்பாறை போலீசார், சந்திரசேகர் மற்றும் இரண்டாவது மனைவி நிர்மலாதேவி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றதில், இந்த வழக்குக்கு சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தபட்ட மற்ற இருவரையும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதிமுக பிரமுகர்களான இவர்களுக்கு மோசடி வழக்கில் 6 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ள நிகழ்வு மணப்பாறை அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
trichy district admk Deputy Secretary arrest