அப்பாவோட செல்லுல படம் இருக்கும்.. திருச்சி சிறுமி கொலை வழக்கில், 14 வயது சிறுவனின் வாக்குமூலம்.!!
Trichy child sexual torture murder police investigation arrest 14 year boy
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் மேல் பகுதியை சார்ந்தவர் ராஜாங்கம். இவரது மகளின் பெயர் கிருத்திகா (வயது 9). இவர் அங்குள்ள வீ.பூசாரிப்பட்டி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று மாலை நேரத்தில் வீட்டின் அருகே இருக்கும் மல்லிகை பூ தோட்டத்தில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.
இந்த விஷயத்தை இப்பகுதியை சார்ந்த 14 வயது சிறுவன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்த நிலையில், அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறுமியை மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கிய நிலையில், அங்கு இரத்த கரையுடன் ஆடை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சட்டை யாருடையது என்று காவல் துறையினர் விசாரிக்கையில், சிறுமி குறித்த தகவலை தெரிவித்த சிறுவனின் ஆடை என்பது தெரியவந்துள்ளது. பின்னர் சிறுவனிடம் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.
இந்த விசாரணையில், சிறுவனின் தந்தைக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. தந்தை அலைபேசியை உபயோகம் செய்த பின்னர், அதே அலைபேசியில் சிறுவன் எதிர்ச்சையாக காண துவங்கிய ஆபாச படங்கள் மற்றும் குற்ற படங்கள், அவனுக்கு விபரீத ஆசையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சிறுமி தனியாக தோட்டத்திற்கு செல்வதை சிறுவன் நோட்டமிட்டுள்ளான்.
இதனையடுத்து சிறுவனை பின்தொடர்ந்து சென்ற சிறுவன் சிறுமிக்கு படத்தில் காட்சிப்படுத்தப்பட்டது போல முத்தம் கொடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியான சிறுமி இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கப்போவதாக தெரிவிக்கவே, படத்தில் காட்சிப்படுத்தப்பட்டது போல சிறுமியின் தலையில் கல்லால் அடித்துள்ளான். இதனால் சம்பவ இடத்திலேயே சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் சிறுவன் பதறியபடி சிறுமியை பிடிக்கவே, சிறுவனின் ஆடையில் இரத்தம் பட்டுள்ளது. பின்னர் சிறுவன் தனது சட்டையை அங்குள்ள தோட்டப்பகுதியில் குழிதோண்டி புதைத்து, அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளான். இந்த சூழ்நிலையிலேயே சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகவே, சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். இது தொடர்பான விசாரணையும் தொடர்ந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy child sexual torture murder police investigation arrest 14 year boy