புதருக்குள் பாதுகாப்பாக தொப்புள்கொடி கூட அகற்றாத பச்சிளம் பெண் குழந்தை.. காவல்துறை விசாரணை.!
Trichy child rescued in bush police investigation about it
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகேயுள்ள பகுதியில், புத்தருக்கு உள்ளே பையொன்று வீசப்பட்டு இருந்தது. இந்த பையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்ட நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பையை சோதனை செய்கையில் உள்ளே குழந்தை இருந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீரங்கம் காவல் அதிகாரிகள், பைக்குள் வெள்ளை துணியால் மறைக்கப்பட்டு இருந்த குழந்தையை மீட்டனர்.
மேலும், குழந்தை தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில், பிறந்து சிலமணிநேரமே ஆன பெண் குழந்தையொன்று இருந்துள்ளது. இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய காவல் துறையினர், குழந்தையை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த குழந்தை கள்ளக்காதல் காரணமாக அல்லது காதலன் கர்ப்பமாக்கி கைவிட்டு சென்ற அவலத்தால் பிறந்திருக்கலாம் என்றும், பிற குழந்தையை கொலை செய்ய மனமில்லாது துணி மூட்டையில் பாதுகாப்பாக வைத்து சென்றிருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy child rescued in bush police investigation about it