சிறுமியை சீரழித்து, நண்பர்களுக்கு விருந்தளித்து வாழ்க்கையில் நரக வேதனை கொடுத்த காமுக மாணவர்கள்.. திருச்சியில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், அதே பள்ளியில் பயின்று வந்த மருதுபாண்டி என்ற காமுக வாலிபர், சிறுமியிடம் பழகி வந்துள்ளான். பின்னாளில் காதலிப்பதாக கதையளந்து விட்ட நிலையில், இவனது காதல் வலையில் சிறுமி வீழ்ந்துள்ளார். 

இந்த சூழ்நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த கொடூர செயலை இவனது நண்பர்களான விமல்குமார் மற்றும் தினேஷிடம் பெருமையாக கூறிய நிலையில், அவர்களும் சிறுமியை அபகரிக்க நினைத்துள்ளனர். 

காதலனின் உதவியுடன் சிறுமி மூவரால் கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தனக்கு நேர்ந்த துயரங்களை சிறுமி வெளியே சொல்ல கூட இயலாது பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்துள்ளார். 

கடந்த சில நாட்களாகவே சிறுமி வயிறு வலிப்பதாக தெரிவித்த நிலையில், அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், காமுகன்களின் சுயரூபம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் மருதுபாண்டியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விமல் மற்றும் தினேஷை தேடி வருகின்றனர்.

பள்ளிப்பருவ நாடக காதல்களால் ஏற்படும் துயரங்கள் என்ன என்று இனியாவது சிறுமிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நிச்சயம் செய்த கணவனாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்னான தாம்பத்தியம், உல்லாசம் பிற்கால வாழ்க்கையில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்த ஒருகணம் போதும் என்பதை பெற்றோர்கள் அறிந்து, பெண் பிள்ளைகளுக்கு தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy child girl sexual abuse police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->