வீதியில் விளையாடிய குழந்தை.. அம்மா என்ற அபயக்குரல்.. துடிதுடிக்க பறிபோன உயிர்.!!
Trichy child died Electric shock attack police investigation
பாலக்கரை பகுதியை சார்ந்த ஆறு வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை படையாட்சி தெரு பகுதியை சார்ந்த சிறுவன் வேல்முருகன். சிறுவன் பெற்றோர்களுடன் வசித்து வரும் நிலையில், நேற்று தனது வீட்டருகே விளையாண்டுகொண்டு இருந்துள்ளார்.
இந்த நேரத்தில், அங்குள்ள மின்மோட்டாரில் சிறுவன் எதிர்பாராத விதமாக கைவைத்த நிலையில், சிறுவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். சிறுவனின் அபயக்குரல் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வந்தனர்.
இதில் சிறுவன் மோட்டார் மின்சாரத்தால் தாக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து, சிறுவனை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்ட பெற்றோர்கள் சிறுவனின் உடலை கட்டியணைத்து கதறியழுத நிலையில், இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மழை பெய்ததன் காரணமாக மோட்டாரில் நீர் பட்டு மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy child died Electric shock attack police investigation