திருச்சி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.! பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியரை கைது செய்த போலீசார்.!
trichy bishop heber college professor arrested
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த புகாரில் உண்மை உள்ளதால், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியரும், தமிழ்த் துறைத் தலைவருமான பால் சந்திரமோகன், அவர் வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் கல்லூரியில் பயிலும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். மாணவிகளின் புகாரையடுத்து கல்லூரி நிர்வாகம் விசாரணை செய்து பேராசிரியர் பால சந்திரமோகனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
மேலும், பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதான பாலியல் புகாரை விசாரணை நடத்திய காவல்துறை கூடுதல் ஆணையர் வனிதா தலைமையிலான குழு, இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அதில், அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட சமூகநல அலுவலர் அளித்த புகாரின் பேரில், பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கம் மகளிர் காவல் துறையினர், இன்று காலை பால் சந்திரமோகனை கைது செய்துள்ளனர்.
English Summary
trichy bishop heber college professor arrested