மரணிக்கும் தருவாயில் 30 பேரின் உயிரை காப்பாற்றிய தனியார் பேருந்து ஓட்டுநர்.. திருச்சியில் கண்கலங்கவைக்கும் சோகம்.! - Seithipunal
Seithipunal


மரணிக்கும் தருவாயில் 30 பேரின் உயிரை தனியார் பேருந்து ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் பூனைகுத்திப்பட்டி பகுதியை சார்ந்தவர் ஆனந்த் (வயது 24). திருச்சியில் இருந்து அன்னவாசல் நோக்கி பேருந்தை ஓட்டிச்சென்ற நிலையில், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரங்குடி பிரிவு சாலை பகுதியில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர் ஆனந்த் சாலைத்தடுப்பு கட்டையின் மீது வாகனத்தை ஏற்றி, அருகில் இருந்த முட்புதரில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். ஓட்டுனரை மீட்ட பயணிகள் விரைந்து அவரை அவசர ஊர்தி மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுநர் ஆனந்தின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறக்கும் தருவாயில் சாமர்த்தியமாக செயல்பட்டு 30 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Annavasal Private Bus Driver Save 30 Passenger Life during End of Life Heart Attack 14 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->