கட்டிடம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம்.. விபரீதம் புரியாமல் விளையாடிய சிறுமி.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!
Trichy Airport Area Child Died Digging Land Building Construction Water Due to Rain
வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் நிரம்பி, 4 வயது சிறுமி தவறி விழுந்து பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருச்சியில் உள்ள விமான நிலையம் ராஜமாணிக்கம் பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது வீட்டிற்கு அருகே இருந்த காலி இடத்தில், வீடு கட்டுவதற்கான அஸ்திவார பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
தற்போது, அங்கு பெய்த மழை காரணமாக பள்ளத்தில் நீர் நிரம்பி காணப்பட்டுள்ளது. இதனை அறியாமல் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சக்திவேலின் 4 வயது மகள் ஸ்ரீ பாண்டீஸ்வரி, பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நீண்ட நேரமாக மகளை காணாது தேடி அலைந்த பெற்றோர், பின்னர் பள்ளத்தில் உள்ள தண்ணீரில் தேடுகையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பள்ளம் தோண்டப்பட்டுள்ள பகுதிக்கு சிறு குழந்தைகள் செல்ல கூடாது என பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும், கட்டுமான பணியில் ஈடுபடும் நபர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy Airport Area Child Died Digging Land Building Construction Water Due to Rain