#Breaking: திருச்சியில் அரங்கேறிய கோர விபத்து.. ரத்தம் வழிந்தும், கைகொடுத்த மக்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்.!!
Trichy Accident peoples rescued safely
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரங்கேறிய விபத்தில், அதிஷ்டவசமாக யாரும் காயம் இன்றி தப்பியுள்ளனர்.
மதுரையில் உள்ள கூடல்நகர் பகுதியை சார்ந்தவர் முருகதாஸ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். திருச்சி பகுதியை சார்ந்தவர் காயத்ரி. காயத்ரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து இவர்கள் சென்னையில் வசித்து வந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக இ-பாஸ் பெற்று மதுரைக்கு வந்துள்ளனர். இதில் திருச்சி அருகே வந்த போது, காரில் இருந்த இ-பாஸ் பறந்துள்ளது.
இ-பாஷை பிடிக்கும் முயற்சியில் கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து காரில் சிக்கியிருந்த கணவன் - மனைவி மற்றும் குழந்தை அலறித்துடித்துள்ளனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் தாமாக முன்வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கண்ணாடிகள் கையை கிழித்த சூழலிலும், உள்ளே இருப்பவர்களை தொடர்ந்து மீட்கும் பொருட்டு அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர் அங்குள்ளவர்கள் வாகனத்தில் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நல்ல வேலையாக சிறிய காயத்துடன் அனைவரும் உயிர் தப்பினர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy Accident peoples rescued safely