திருச்சி சிறுமி கொலை வழக்கு... கண்ணீருடன் மகளின் உடலை பெற்ற பெற்றோர்.!!
Trichy 14 year child girl Mystery death Body Postmortem complete
திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை அதவத்தூர் பகுதியை சார்ந்தவர் பெரியசாமி. இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவரது மகள் கங்காதேவி (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் தனது தோழிகளுடன் விளையாண்டுகொண்டு இருந்துள்ளார்.
இதன்பின்னர், வீட்டில் இருந்த குப்பையை சேகரித்து அங்குள்ள முள்காட்டு பகுதியில் கொட்ட சென்றுள்ளார். இதன்பின்னர் மாலை வரை வீட்டிற்கு திரும்பாத நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல இடத்தில் தேடியுள்ளனர். இதில் குப்பையை கொட்ட சென்ற இடத்தில் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்தது சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள், திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் விரைந்து விசாரணை துவங்கினர். பின்னர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் உறவினர்கள் இரண்டு பேர் உட்பட மொத்தமாக 11 பேரை காவல் துறையினர் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக 11 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று மாலை அல்லது நாளை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy 14 year child girl Mystery death Body Postmortem complete