வைகோ மீது தேசத் துரோக வழக்கு.! வைகோ நேரில் ஆஜர்.!! - Seithipunal
Seithipunal


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது அதில் கலந்துகொண்டு பேசிய வைகோ அவர்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக பேசி உள்ளதாக அவர் மீது தேச துரோக வழக்கு பதிவானது.

இது தொடர்பாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கு எம்.பி., எம்.ல்.ஏ க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில்  திங்கள்கிழமை நீதிபதி ஜெ.சாந்தி முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜரானார். இதை தொடர்ந்து விசாரணையை ஜூன் 19 ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

treason case against Vaiko


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->