திருப்பூரில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி..!
training for teachers in Tiruppur
கல்வி தொலைகாட்சி மூலம் கற்பித்தலுக்கான பயிற்சி சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கபட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு கற்ப்பித்தலுக்கான பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி பெத்தேல் நர்சரி பள்ளியில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே பங்குபெற்றனர்.
இப்பயிற்சிக்கு பள்ளியின் முதல்வர் சங்கர் தலைமை தாங்கினார். முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, சுப்பிரமணி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பாட செயல்பாடு தயாரிப்பு, கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்தல் குறித்து விளக்கம் தெரிவித்தனர்.
இது குறித்து பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் கூறும் பொழுது:
இந்த பயிற்சி கல்வி தொலைகாட்சி வாயிலாக மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாட செயல்பாடுகளை எப்படி கற்பிப்பது என்பது குறித்து விளக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் பாட செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
English Summary
training for teachers in Tiruppur