நடிகர் ரஜினிக்கு அபராதம்! போலீசார் நடவடிக்கை!  - Seithipunal
Seithipunal


சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்றபோது சீட் பெல்ட் அணியாமல் சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. 

சென்னை போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு சென்றபோது அவர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு நூறு ரூபாய் அபராதம் விதித்து தாழம்பூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். 

இந்த நிலையில் ஜூன் 26ஆம் தேதி அந்த நூறு ரூபாய் அபராதம் செலுத்தியதற்கான ரசீது விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றபோது, ஈ பாஸ் பெற்று சென்றாரா? உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட, அவர் வெளியிட்ட E பாஸ் ஸ்கேன் செய்த போது அதில் 100 ரூபாய் அபராதம் கட்டாமல் இருப்பது காட்டியது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Traffice Police fined Rajinikanth for doesnt wear seat belts while driving


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->