உதயநிதியின் எதிர்காலம் என்ன.!! திமுக கூட்டத்தில் அறிவித்த எம்பி.!!
TR balu says about udhayanithi
கடந்த மக்களவை தேர்தலில் திமுக தேனி தொகுதியை தவிர்த்து மீதமுள்ள (வேலூரை தவிர்த்து) மீதமுள்ள 37 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தேனியில் மட்டும் ஓபிஎஸ்ன் மகன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை, போரூரில் நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், டி.ஆர்.பாலு தனது உரையைத் துவங்கும்போது, உதயநிதி ஸ்டாலினை சுட்டிக்காட்டி, ‘இயக்கத்தின் இளந்தென்றல்’ என்றும், ‘கழகத்தின் வருங்காலம்’ மற்றும் ‘இயக்கத்தின்’ எதிர்காலம் என்றும் புகழ்ந்து பேசினார். எனவே உதயநிதி விரைவில் அரசியலில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
TR balu says about udhayanithi