முடிவுக்கு வந்தது ஒரு வருட தடை.. கும்பகரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி..!
Tourists allowed at Kumbakarai Falls
மீண்டும் கும்பகரை அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுவர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்டது. அதனால், அருவியில் குளிக்க தடை விதித்தனர். இந்நிலையில், தற்போது, நோய் பரவல் குறைந்து உள்ளதால் மீண்டும் கும்பகரை அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா முன்னச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தெரிவித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Tourists allowed at Kumbakarai Falls