மகிழ்ச்சி... நாளை விடுமுறை.. அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்.!
Tomorrow leave For thiruvarur district
டிசம்பர் 12 ஆம் தேதியான நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் முத்துப்பேட்டை பகுதியில் தாவூத் காம் தர்கா மிகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த தர்காவுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இங்கு ஒலியுல்லாஹ் என்ற முஸ்லிம் சூபி அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
எனவே இப்பகுதியில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இங்கு மத வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் விழாவிற்கு வருகை புரிவார்கள். மத சகிப்புத் தன்மைக்கு இந்த நிகழ்ச்சி ஒரு அருமையான எடுத்துக்காட்டு.
எனவே நாளை இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
Tomorrow leave For thiruvarur district