கனமழை : நாளை (02-12-19) இதுவரை விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!
tomorrow (02-12-19) school college leave districts for rain
வடகிழக்கு பருவமழை ஆனது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் தீவிரமாக பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், மதுரை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை செய்து ‘ஆரஞ்சு அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனமழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் விடுமுறையின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பின்னர் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tomorrow (02-12-19) school college leave districts for rain