தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை மையம் அறிவிப்பு.!
today rain for 3 districts in tamilnadu
தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில், அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 4 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
English Summary
today rain for 3 districts in tamilnadu