தமிழகத்தை புரட்டி எடுக்கும் கொரோனா.. திருவாரூரில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,438 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 26,782 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 49 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 33,244 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 919 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,295 ஆக உயர்ந்துள்ளது.

இன்று திருவாரூரில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 161ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்பிய 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today 12 corona positive in thiruvarur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->